"மாணவர்களுக்கான ஹெல்ப்-லைன்" : 4,214 அழைப்புகள் வந்ததாக அமைச்சர் விளக்கம்

இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் மாணவர்களுக்கான உதவி மைய எண் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், நேற்று இரவு 10 மணி வரையிலும் 4,214 மாணவர்கள் உதவி மையத்தை தொடர்புக்கொண்டு தங்களுக்கு தேவையான கருத்துக்களை கேட்டறிந்து உள்ளதாகவும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


கோவை : இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் மாணவர்களுக்கான உதவி மைய எண் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும்,  நேற்று இரவு 10 மணி வரையிலும் 4,214 மாணவர்கள் உதவி மையத்தை  தொடர்புக்கொண்டு தங்களுக்கு  தேவையான கருத்துக்களை கேட்டறிந்து உள்ளதாகவும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, "பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது. ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.குறிப்பிட்ட காலத்திற்குள் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாணவர்களுக்காக 24 மணி நேரமும் செயல்படும் 14417 என்ற புதிய உதவி மைய எண் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  இந்த உதவி மையத்திற்கு நேற்று இரவு 10 மணி வரை 4,214 அழைப்புகள் வந்துள்ளன. அதில் மாணவர்கள் தொடர்பு கொண்டு தங்களுக்கு  தேவையான கருத்துக்களை கேட்டனர். அதில் 1742 பேருக்கு விடையளிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் எந்த கல்வி பாடத்தை தேர்ந்தெடுக்கலாம்  என்பது உள்ளிட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் விடையளிக்கும் வகையில் உதவி மைய எண் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை சரி செய்வதற்காக  ஸ்நேகா என்ற தனியார் நிறுவனம் மூலமாக மாணவர்களின் வீட்டிலேயே சென்று மாணவர்களுக்கு கவுன்ஸ்லிங் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளது.

அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், பள்ளிக்கு தவறாமல் வரும் மாணவர்கள் சமூக சேவை செய்யும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அரசின் சார்பில் ஊக்கம் மற்றும்  ஆக்கத்தையும் தருவது தொடர்பாக  பரிசீலிக்கப்பட்டு வருகிறது." என்றார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...